நல்லாட்சி அரசாங்கத்தைத் தொடர்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்: செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

🕔 February 15, 2018

தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று வியாழக்கிழமை  தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை அலறி மாளிகையில் சந்தித்து, தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேசினர்.

இதனையடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, கட்சி செயலாளர் கபீர் ஹாசிம் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, இன்றைய சந்திப்பினையடுத்து அலறி மாளிகைக்கு வெளியில் ஊடகவியலாளர்களைக் சந்தித்த கபீர் ஹாசிம்; “இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர், தேசிய அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்தனர்” என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கும், இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்