நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துங்கள்: மஹிந்த ராஜபக்ஷ

🕔 February 12, 2018

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து விட்டு, உடனடியாக பொதுத் தேர்தலை, நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார்.

அதேவேளை, நாடாளுமன்றில் தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மக்களின் தீர்ப்பினை மதிக்கும் வகையில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்