சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் கலைப்பு; இன்னும் சற்று நேரத்தில் பக்ஸ் மூலம் கடிதம் அனுப்பப்படும்: முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு

🕔 January 10, 2018

– மப்றூக் –

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாகம் கலைக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஏர்.எம். மலீக் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விட்டு, தற்காலிக நிருவாகமொன்றினை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி நிருவாகமானது  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், அவ்வாறானதொரு அறிவித்தல் இதுவரை தனக்குக் கிடைக்கவில்லை என்று, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா ‘புதிது’ செய்தித் தளத்துக்கு கூறினார்.

இது குறித்து முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளரிடம் பகல் 12.20 மணியளவில் வினவிய போது,  இன்னும் சற்று நேரத்தில் உரியர்களுக்கு பக்ஸ் மூலம் கடிதம் அனுப்பப்படும் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்