மக்காவிலிருந்து தங்க நகை கடத்திய கல்முனை நபர், விமான நிலையத்தில் சிக்கினார்
சஊதி அரேபியாவின் மக்கா நகரிலிருந்து தங்க நகைகளை கடத்தி வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவராவார். இவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் கொண்டுவந்த பயணப் பொதியில் இருந்து 814.16 கிராம் நிறையுடைய தங்க நகைகள் இதன்போது கண்டெடுக்கப்பட்டது. அவற்றின் பெறுமதி 44 லட்சத்து 72 ஆயிரத்து 380 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்க வளையல்கள், மோதிரங்கள் மற்றும் பெண்டன்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் ஆகியவை, கண்டெடுக்கப்பட்ட நகைகளில் உள்ளடங்குகின்றன.
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபருக்கு 01 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.