வெளிநாட்டு தேர்தல் கண்கானிப்பாளர்கள், இம்முறை இல்லை: தேசப்பிரிய
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று, கண்காணிப்பினை மேற்கொள்வதற்கு மட்டும், உள்ளுர் தேர்தர் ககண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
‘கபே’ மற்றும் ‘பெப்ரல்’ போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தமது உள்ளுர் பிரதிநிதிகளைப் பயன்படுத்தி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவது வழமையாகும்.