2000 கைத் தொலைபேசிகளுடன், 03 சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் கைது
உரிய அனுமதியின்றி 2000 கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கடத்த முயற்சித்த இலங்கையர்கள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதோடு, தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி, மேற்படி தொலைபேசிகளை இவர்கள் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்ததாக, சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேற்படி சந்தேக நபர்கள் துபாய் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து விமான நிலையத்தில் வந்திறங்கியதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளின் பெறுமதி சுமார் 60 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.