அணி மாறினார் சிறியாணி; மஹிந்த தரப்பிலிருந்து மைத்திரிக்கு ஆதரவு
மஹிந்த ராஜபக்ஷ ஆரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சந்தித்த இவர், தனது ஆதரவினை வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
சட்டத்தரணியான சிறியாணி, அம்பாறை மாவட்டத்தைத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவானவர்.
முன்னதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.