தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

🕔 October 23, 2017

– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை வளாகத்தில் இந்துக் கோயில் ஒன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ குஞ்சுத் தம்பி நிமலேஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த அடிக்கல் நடும் நிகழ்வில், கணிதவியல் விஞ்ஞானத்துறை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. கோமதிராஜ் மற்றும்  விரிவுரையாளர் தசாஜினி நாகேந்திரன் உள்ளிட்டவர்களும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இந்து அமைப்பின் பிரதிநிதிகளும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த இந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்காக இந்த கோயில் நிர்மாணிக்கப்படுகிறது. பிரயோக விஞ்ஞான பீடத்தில் இந்து சமயத்தைச் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என சுமார்90 பேர் உள்ளனர். இவர்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் குறித்த கோவிலை நிர்மாணிக்கின்றனர்.

ஏற்கனவே பௌத்தர்களுக்கான வணக்கஸ்த்தலம் ஒன்றும் இங்கு  நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்