இந்தியாவிருந்து 72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, இலங்கை வந்தடைந்தது

🕔 October 10, 2017

ந்தியாவிலிருந்து 12500 மெற்றிக் தொன்  பச்சை நாட்டு அரிசி, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு உபகுழு மேற்கொண்ட முடிவுக்கமைய, இலங்கை அரசாங்கம் இந்திய தனியார் துறையினரிடம் இருந்து 72,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டது. இதனையடுத்து அதன் முதலாவது தொகுதி இன்று கொழும்புத் துறை முகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை “அரிசித் தட்டுப்பாட்டை நீக்கும் வகையிலும் அதன் விலையை சாதாரணமாக சந்தையில் பேணும் வகையிலும் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரிசியானது சந்தையில் பாவனைக்கு விடப்படுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்”.

இந்த நிலையில், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள இந்த குறிப்பிட்ட அரிசித் தொகுதியை கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் பொறுப்பேற்று, லங்கா சதொச விற்பனை நிலையங்களூடாக நுகர்வோருக்கு கிலோ ரூபா 74/- இற்கு விற்பனை செய்யுமென மேற்சொன்ன அதிகாரி தெரிவித்தார்.

இந்திய தனியார் துறையினரிடமிருந்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் கிலோ ஒன்றுக்கு ரூபா 72/- வுக்கு கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்