கார் – முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்

🕔 September 6, 2017

– க. கிஷாந்தன் –

ட்டிப்பொல 24ம் கட்டை,  நுவரெலியா – ஹோட்டன்தென்ன பிரதான வீதியில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டிப்பொலவிலிருந்து ஹோட்டன்தென்ன பகுதியை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், ஹோட்டன்தென்னவிலிருந்து பட்டிப்பொல பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட நால்வர் பயணித்துள்ளனர். அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதியோடு மேலும் இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர் கேகாலை அரநாயக்க பகுதியை சேர்ந்த யூ.எல். சம்பத் சோமரத்ன (வயது – 20) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியை வேகமாக செலுத்தியதினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு முச்சக்கரவண்டி சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும் இந்த நிலையில், முச்சக்கரவண்டி சாரதியையும், கார் சாரதியையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், அவர்களை இன்று புதன்கிழமை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்