சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது ஆண்டு மாநாடு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பூங்கா மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் தற்போது (மாலை 4.30 மணி) கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள போதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தரவில்லை.
சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.