உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்: அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு பலன்

🕔 August 24, 2017

 

.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாட பரீட்சை, எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறுவதற்கு அட்டவணைப்படுத்தப் பட்டிருந்த நிலையில், அப் பரீட்சையினை 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஹஜ் பெருநாளினை எதிர்வரும் 02ஆம் திகதி முஸ்லிம்கள் கொண்டாடுவதால்,  அன்றை தினம் நடைபெறவிருந்த மேற்படி பாடத்துக்கான பரீட்சையை, பிற்போடுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த நடவடிக்கையை தாம் மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் அகிலவிராஜ் மேலும் கூறினார்.  

பரீட்சையை திட்டமிட்டப்படி உரிய தினத்தில் நடத்தாமல், அடுத்த நாள் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதன் மூலம், பரீட்சைத் திணைக்களத்திற்கு மேலதிக செலவும், சில ஷ்டங்களும் உள்ள போதும், ஹஜ் பெருநாள் தினத்தில் பரீட்சையை நடத்துவதால்,  முஸ்லிம் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை  கவனத்திற்கொண்டே,  இந்த முடிவை மேற்கொண்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் புஷ்பகுமாரவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் தொடர்புகொண்டு, பரீட்சையை 03ஆம் திகதி நடத்தும் தீர்மானத்தை உறுதிப்படுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்