ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

🕔 August 23, 2017

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ‘பேபி பவுடர்’ பயன்படுத்தியமை காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு , 417 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் 6379 கோடி ரூபா) நிவாரணமாக வழங்குமாறு, அந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஈவா எக்கேவர்ரியா எனும் பெண், கடந்த வருடம் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்துக்கு எதிராக இந்த வழக்கினை தொடுத்திருந்தார்.

பிரபல நிறுவனமான ஜோன்சன் அன்ட் ஜோன்சன்; குழந்தைகளுக்கான டால்கம் பவுடர், ஷாம்பூ, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் பவுடரை சிறுவயது முதலே பயன்படுத்தியதால், தனக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் 63 வயதான பெண் ஒருவர் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத்தொகையாக 417 மில்லியன் டொலர்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.

பிரபல நிறுவனமான ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் பவுடரால் புற்றுநோய் ஏற்படுவதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்