ஹஜ் பெருநாள் செப்டம்பர் 02ஆம் திகதி; கொழும்பு பெரிய பள்ளிவாசல்அறிவிப்பு

🕔 August 22, 2017

ஜ் பெருநாள் செப்படம்பர் 02ஆம் திகதி கொண்டாடப்படும் என்று, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நாட்டின் எப்பகுதியிலும் இன்று செவ்வாய்கிழமை பிறை தென்படவில்லை என்பதனால், துல் – கஃதா மாதம் முப்பது நாட்களால் பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நாளை  23ஆம் திகதி மாலை துல் – ஹஜ் 1438 ஆரம்பமாகும் எனவும் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, முஸ்லிம் கலாசார திணைக்கள பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, செப்படம்பர் மாதம் 02ஆம் திகதி (சனிக்கிழமை) ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்