தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு

🕔 August 21, 2017

– அ. அஹமட் –

மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழர் – முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவிவருகிறது. இந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைப் பிரயோகத்தை கையாண்டிருந்தார். இப்படியான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகத்தை ஞானசார தேரர் கூட பாவித்திருக்கவில்லை எனக் கூறினாலும் தவறாகாது.

குறித்த தேரர், ஞானசார தேரரின் நெருங்கிய சகாவாவார் என்பது யாவருக்கும் தெரியும். ஞானசார தேரர் அடங்கியிருந்தாலும் அவரின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இனவாத நிகழ்ச்சி நிரல்கள், டான் பிரசாத் மற்றும் இவ்வாறான தேரர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதனை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது.

இது தமிழர் மற்றும் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் இவர் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமில்லை. அல்லது இவருக்கு அனைத்து பிரச்சினைகளின் போதும் தலையிட்டு தீர்வைபெற்றுக் கொடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

மேற்படி அதிகாரம் மறைமுகமாக தேரருக்கு  வழங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந் நாட்டின் அதிகாரம் பௌத்த அடிப்படைவாதிகளின் கைகளில் படிப்படியாக சென்று கொண்டிருப்பதை இதனூடாக அறிந்துகொள்ளலாம்.

குறித்த தேரர் பிரச்சினை எழுந்த இடத்தில் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். இதற்கு முன்பும் ஒரு தடவை அவர் நீதிமன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். பௌத்த தேரர்களுக்கு நீதிமன்ற உத்தரவை கிழித்தெறியும் வகையிலான சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற அச்சம் எழுகிறது.

இவரின்செயற்பாடானது இலங்கை நீதிதுறையின் செயற்பாட்டை பலவீனப் படுத்துகிறது. இதுவெல்லாம் நாட்டுக்கு சிறந்ததல்ல.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்