அது நாற வாய், இது வேற வாய்; அஸாத் சாலியின் இரட்டை வேடம் அம்பலம்

🕔 July 13, 2017

ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக அஸாத் சாலி கூறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதே ஜனாதிபதியுடன் பங்களாதேஷுக்கு, அஸாத் சாலி தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமை மூலம், தான் ஒரு அரசியல் தரகர் என்பதை, அஸாத் மீண்டும் ஒரு முறை சமூகத்திற்கு நிரூபித்து காட்டியுள்ளார் என்று, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர், இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பிடுகையில்;

ஞானசார தேரரும் அஸாத் சாலியும் கூட்டாளிகள் என்றும், ஞானசார தேரரை அரசாங்கமே  பாதுகாக்கிறது என்ற விடயத்தையும் நாம் கூறும்போது,  எம்மை ஏளனம்செய்த அஸாத் சாலி போன்றவர்கள், ஜனாதிபதியே ஞானசார தேரரை பாதுகாப்பதாக பின்னர்பகிரங்கமாக கூறியிருந்தார்கள்.

முஸ்லிம் சமூக விடயங்களை வைத்து, அஸாத் சாலியின் தொண்டர்களும், அவர் ஏதோ சமூகத்துக்காகக் குரல் கொடுக்கும் மாவீரன் என்ற அளவுக்கு ஊடகங்களில் அவரை விளம்பரம் செய்தனர்.

ஆனால், இன்று பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதியுடன் அஸாத் சாலியும் சென்றுள்ளமையை எம்மால்அவதானிக்க முடிந்தது.

ஞானசார தேரரை ஜனாதிபதியே பாதுகாப்பதாக ஊடகங்களில் கூறி முஸ்லிம்களை உசுப்பேற்றி அரசியல் இலாபம் தேடிய  அஸாத் சாலி,  அதே ஜனாதிபதியுடன், இன்று தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமையானது, அஸாத் சாலியின் இரட்டை முகத்தை மீண்டும் ஒருமுறை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

வில்பத்து வர்த்தமானியை ரத்து செய்வதாக வாக்கு வழங்கி ,மரிச்சுக்கட்டி மக்களின் போராட்டத்க்தை முடித்து வைத்தமைக்காக, அஸாத் சாலிக்கு ஜனாதிபதி வழங்கிய சுற்றுலாவாகவே, நாம் இதைப் பார்க்கிறோம்.

ஜனாதிபதியின் இப்தாரை தாங்கள் புறக்கணிப்பு  செய்ததாக  விளம்பரப்படுத்திய அஸாத் சாலியும் அவருடைய சகாக்களும், இப்போது பங்களாதேஷுக்கு ஜனாதிபதியுடன், அவர் தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமையை என்ன கூறி நியாயப்படுத்தப் போகிறார்கள். 

ஊடகங்களில் வந்து இனவாதிகளை உசுப்பேற்றி அரசியல் லாபம் தேடும் அஸாத் சாலி போன்ற போலிகள் தொடர்பில், இலங்கை முஸ்லிம்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்