கோட்டாவை ஏன் கைது செய்ய வேண்டும்; காரணங்களை பட்டியலிடுகிறார், சரத் பொன்சேகா

🕔 July 8, 2017

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை என்று அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யபடவுள்ளதாக கூறப்படுகின்றது. அது தவறான விடயமல்ல.

பண மோசடியில் ஈடுபட்டவர்கள், திருட்டு பணத்தில் தாய் தந்தையருக்கு சமாதி அமைத்தவர்கள், பணத்தை மோசடி செய்தவர்கள் மற்றும் மனித கொலையுடன் தொடர்பு பட்டவர்கள்கள் மீது வழக்கு தொடரவேண்டும்.

இதேவேளை, பாதுாகப்பு தரப்பிக்புக்குள்ளும், மஹிந்த ராஜபக்ஷ குழுக்களை பாதுகாக்கும் ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்களை முதலில் திருத்த வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்