பொலிஸ் வேட்டை; 07 ஆயிரம் சாரதிகள், ஒரு நாளில் சிக்கினர்
கொழும்பிலும் அதன் புறநகர் பகுதியிலும், கடந்த 12ஆம் திகதி வீதி ஒழுங்கினை மீறிய 07 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி ஒழுங்குகளை மீறுவோருக்கு எதிராக, கடந்த 12ஆம் திகதி பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றினை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது வீதி ஒழுங்குகளை மீறிய 7456 வாகன ஓட்டிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினார்.
இதேவேளை, மது அருந்திய நிலையிலும், பொறுப்பற்ற ரீதியிலும் வானங்களைச் செலுத்தி போக்குவரத்து மீறல்களில் ஈடுபட்ட 1674 பேருக்கு எதிராகவும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.
இந்த விசேட நடவடிக்கை தொடரும் எனவும் அறிவிக்கப்படுகிறது.