கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மனைவி காலமானார்
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் மனைவி கிதுருன்நிசா இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.
குறுகிய காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர், கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர், கார்கோ லங்கா நிறுவனத்தின் பணிப்பாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான றியா, றியாஜத் மற்றும் றீஸ்மா ஆகியோரின் தாயாருமாவார்.
ஜனாஸா, கொழும்பிலிருந்து அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குக் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என, குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திப்போம்.