ஞானசார தேரரை பாதுகாப்பது யார்; உண்மை தெரிந்தும் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகிறதாம்

🕔 June 12, 2017

ஞானசார தேரரின் பின்னால் அமைச்சர் ஒருவர் இருப்பதாகக் கூறுகின்றமை, வெறும் பூச்சாண்டி என்றும், நல்லாட்சி அரசாங்கமே ஞானசார தேரரின் பின்னால் உள்ளது என்பதை, ஆட்சியாளர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்;

“பொதுபல சேனாவை உறுவாக்கியவர்கள் மஹிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறியவர்கள்தான், உண்மையில் பொதுபல சேனாவை உருவாக்கி, அவர்களை முஸ்லிம்கள் மீது ஏவி விட்டு, ஆட்சியைக் கைப்பற்றிள்ளனர் என்பது இப்போது மக்களுக்கு தௌிவாகியள்ளது.

ஞானசார தேரர் விடயத்தில் பொலிஸாரும் அரசும் நடந்துகொள்ளும் விதங்களைப் பார்க்கும் போது, ஞானசாரரின் பின்னணியில் ஓர் அமைச்சர் இருப்பதாகக் கூறுவதை வெறும் பூச்சாண்டியாகவே மக்கள் பார்க்கின்றனர்.

கடந்த ஓரிரு வாரங்களுக்குள் முஸ்லிம்களின் வர்த்த நிலையங்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன. இவை தொடர்பில் பொதுபல சேனாவை பொலிஸார் விசாரணை செய்யவில்லை. மூன்று தடவை நீதிமன்றுக்கு வருகை தராத ஒருவருக்கு, நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கவில்லை. இவற்றையெல்லாம் ஓர் அமைச்சரால் செய்ய முடியாது. ஓர் அரசாங்கத்தினாலேயே செய்ய முடியம் என்று நாம் கருத வேண்டியூள்ளது.

ஞானசார தேரரை அரசாங்கம் பாதுகாக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஓர் அமைச்சர் எனக்கூறி பழியைப் போட்டு, இந்த விடயத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஆனாலும், நல்லாட்சி அரசாங்கம்தான் ஞானசார தேரரைப் பாதுகாக்கின்றது என்பது தொடர்பில் முஸ்லிம் மக்கள் மிகத் தௌிவாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் தமிழ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்