மீராவோடை தையல் கடையில் தீ விபத்து; பெருமளவு துணிகள் நாசம்

🕔 April 17, 2017
– எம்.ரீ. ஹைதர் அலி –

மீராவோடை மேற்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தையல் கடையொன்றில் இன்று திங்கட்கிழமை தீ பரவியதில் அங்கிருந்த தையல் சாதனங்கள் மற்றும் துணிகள் போன்றவை நாசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத் தீ விபத்தினால் சுமார் 250,000 ரூபாய் பெறுமதியான துணி வகைகள் பொருட்கள் முற்றாக நாசமடைந்ததாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹயாத்து முகம்மது முஹம்மது மர்சூக் என்பருக்குச் சொந்தமான கடையே, இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்