மஹிந்தவின் தலையில் பிரச்சினை

🕔 January 9, 2017

Mahinda Rajapaksa - 0987க்கள் ஒருபோதும் முட்டாள்களின் பேச்சுக்களை நம்பி குழப்பமடையமாட்டார்கள் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;

“நல்லாட்சியை இவ்வருடத்துக்குள் கவிழ்த்து காட்டுவதாக தினந்தோறும் கூச்சலிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகல் கனவு காணுகிறார். அவருக்கு  இந்த வாரத்தக்குள்ளேயே தேசிய அரசாங்கத்தில் உள்ள பலரும் பதிலளித்து விட்டார்கள்.

தொடர்ந்து அவர் இவ்வாறு கூறிக்கொண்டிருப்பாராயின் அவரின் தலையில் ஏதேனும் பிரச்சினை இருக்கக் கூடும்.

முட்டாள்களின் பேச்சுக்களை நம்பிக்கொண்டு மக்கள் ஒருபோதும் குழப்பமடையமாட்டார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்