மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும்

🕔 July 5, 2015

Marutham ifthar - 01– எம்.வை. அமீர் –

ருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதுவில் இடம்பெற்றது.

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்புச் செயலாளரும்  – முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்பாளருமான செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில், சாய்ந்தமருதில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகளான எம்.ஐ.ஏ. ஜப்பார் மற்றும் ஏ. பீர்முகம்மட் ஆகியோரும், மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிராந்திய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இப்தார் நிகழ்வில், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.ஐ. ஆதம்பாவா ஷர்க்கி –  இஸ்லாமிய நற்போதனைகளை வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்