இனவாதம் பேசுவோருக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

🕔 November 18, 2016

Maithripala sirisena - 0987னவாதம் பேசுவோர் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதன்போதோ, ஜனாதிபதி இந்த கட்டளையைப் பிறப்பித்தார்.

குறித்த கூட்டத்தல் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளையும் செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு உத்தரவிட்டார் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பேஸ்புக், இணையதளங்கள் மூலமும் இனவாதக் கருத்துகளை செய்திகளாகவோ, கருத்துகளாவோ பதிவு செய்பவர்களையும் கண்காணித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறும், ஜனாதிபதி தனது செயலாளருக்கு பணித்தார்.

அத்துடன் இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, நீதி அமைச்சருக்கும் பணிப்புரை விடுத்தார்.

புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டனை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலும் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதன்போது விளக்கமளித்தார்.

அப்படியானால், புதிய சட்டம் வரும்வரை காத்திருக்காமல், உடன் செயல்படும்படி, பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், விஜேதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், சாகல ரத்நாயக்க, சுவாமிநாதன், ருவன் விஜயவர்தன,  நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தின தேரர், ஜனாதிபதி செயலாளர், பொலிஸ் மா அதிபர், முப்படை தளபதிகள், சட்ட ஒழுங்கு அமைச்சு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்