லஞ்ச, ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
லஞ்ச, ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமன்ன இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சரத் ஜயமன்ன, தனக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதியிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டார்.
லஞ்ச, ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராகப் பதவி வகித்த தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, அண்மையில் தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்திருந்தார்.
லஞ்ச, ஊழல்கள் விசாரணை ஆணைக்குழு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தினையடுத்து, தில்ருக்ஷி டயஸ் ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.