சபாநாயகர் கரு ஜயசூரிய மகள், லண்டனில் மரணம்
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் சஞ்ஜீவனி இந்திரா தனது 40 ஆவது வயதில் லண்டனில் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான சஞ்ஜீவனி, பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துக்கான கற்கையில் இளங்கலை பட்டம் பெற்றதோடு, லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், பல முன்னணி நிதி நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் பிரிவு சிரேஷ்ட பதவிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
இவரின் மரண சடங்குகள் லண்டனில் இடம்பெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.