மஹிந்த அணியினரின் புதிய கட்சி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

🕔 November 2, 2016

Mahinda - 055ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) எனும் புதிய கட்சியொன்று உதயமாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் இந்தக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கட்சியின் சின்னம் மலர் மொட்டாகும்.

அபே ஸ்ரீலங்கா நிதஹஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) என, விமல் வீரவன்சவை தலைவராகக் கொண்டு பதியப்பட்டிருந்த, கட்சியொன்றே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என தற்போது  பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜாபக்ஷவின் ஆதரவுடன், ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ள கட்சியாக,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் மேற்படி கட்சி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமான நொவம்பர் 18 ஆம் திகதி, ஒன்றிணைந்த எதிரணியினரின் புதிய கட்சி அறிவிக்கப்படும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்