மலைத் தொடரில் தீ; 13 குடும்பங்கள் இடம்பெயர்வு, 40 ஏக்கர் காணியில் அழிவு
🕔 October 13, 2016
– க. கிஷாந்தன் –
பதுளை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள ஹோட்டன் சமவெளி சரணாலயத்துக்கு அருகாமையிலுள்ள ஒஹிய உடவேரிய மலைத்தொடரில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் – தீ பரவி வருகின்றது.
தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச மக்களும் சரணாலய அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் இவர்களின் முயற்சி பயனளிக்காது போயுள்ளது.
மேற்படி மலைத்தொடரில் ஏற்பட்டுள்ள தீயினால் மலையிலிருந்து கற்கள் புரண்டு விழும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ள 13 குடும்பங்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தீயினால் தற்போது வரை 40 ஏக்கர்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அழிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி ஒஹிய உடவேரிய மலைத்தொடரில் தொடர்ந்தும் தீ பரவி வருகின்றமை குறிப்பிடதக்கது.