நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப், விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
🕔 October 8, 2016
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பயணித்த வாகனம் தம்புள்ளை, பெல்வெஹர பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
இதன்போது வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் லொறி ஒன்றின் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது.
விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், அவரின் மகள், மகன், வாகனத்தின் சாரதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோர் காயமடைந்த நிலையில், தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து திருகோணமலை நோக்கி புறப்படும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.