அட்டாளைச்சேனையில் இரத்த தான நிகழ்வு
– றிசாத் ஏ காதர் –
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப் பிரதேசத்தில் இயங்கிவரும் ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பின் வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ஹன்ழலா பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பானது, கடந்த பல வருடங்களாக இவ்வாறான இரத்ததான நிகழ்வினை இப்பிரதேசத்தில் சிறப்பாக நடாத்திவருகின்றது.
இதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் அட்டாளைச்சேனை பிரதேசத்தினை மையப்படுத்தியதாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடைபெறவுள்ள, இந்த இரத்ததான நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்துள்ளதாக அமைப்பின் தலைவர் அஷ்ஷேஹ் எம்.ஏ.முபீன்(ஸஹ்வி) தெரிவித்தார்.
இரத்தானம் வழங்க ஆர்வமுள்ளோர் கீழ் வரும் தொலைபேசி இலக்கத்தின்ஊடாக தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
தொலைபேசி இலக்கம்: 0778270730