அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய கடமையேற்பு
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய இன்று திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவராவார்.
டென்மார்கினை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ரங்க கலன்சூரிய – ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளருமான காலஞ்சென்ற சோமாதேவி பரணயாப்பாவின் புதல்வராவார்.