சாட் நாட்டின் முன்னாள் தலைவருக்கு ஆயுள் தண்டனை

🕔 May 31, 2016

Hissene Habre - 0111
பிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாட்டின் முன்னாள் தலைவர் ஹிஸ்ஸினி ஹப்ரெ, போர் குற்றும் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

செனகல் நாட்டிலுள்ள ஆபிரிக்க ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

1982 லிருந்து 1990 வரை அவர் ஆட்சியில் இருந்த சமயத்தில் இந்த குற்றங்கள் இழைக்கப்பட்தாகக் கூறப்படுகிறது.

அவரின் ஆட்சிக் காலத்தில் நாற்பதாயிரம் மக்களை கொல்வதற்கு, அவர் உத்திரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆயினும், அதனை மறுத்த ஹப்ரெ, நீதிமன்றத்தின் சட்டபூர்வத் தன்மையினை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

ஆபிரிக்க ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற நீதிமன்றமொன்று, ஆபிரிக்க நாடொன்றின் முன்னாள் தலைவர் ஒருவரை இது போன்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்தமை, இதுவே முதன் முறையாகும்.

1942 ஆம் ஆண்டு பிறந்த ஹிஸ்ஸினி ஹப்ரெவுக்கு தற்போது 74 வயதாகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்