
உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையொனறில் 08 வருடங்களாக பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரின் சேவையை, சட்டவிரோதமான முறையில் நீக்கியமைக்காக நட்டஈடு வழங்குமாறு அந்தத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், சேவையை நிறுத்தும் நேரத்தில், ஊடகவியலாளர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தொலைக்காட்சி அலைவரிசை தவறிவிட்டதாகக் குறிப்பிட்டது.
ஊடகவியலாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் – எவ்வித அடிப்படையுமின்றி நிர்வாகம் தன்னிச்சையாக முன்வைத்திருக்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஊடகவியலாளர் நிரோஷ் மைத்திரிக்கு 13.5 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு உள்ளூர் தொலைக்காட்சிக்கு அலைவரிசைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு ஓகஸ்ட் 02 வரை மேல்முறையீட்டு கால அவகாசம் உள்ளதாக குறிப்பிட்டது.
எனினும், அதுவரை உரிய இழப்பீடு நீதிமன்றத்தில் வைப்புச் செய்யப்பட வேண்டும்.



