மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் இரட்டிப்பாகிறது
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போது 1.1 மில்லியன் மாணவர்களுக்கு மதிய உணவை அமைச்சு வழங்கி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க எய்ட், உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஜனவரி மாதம் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.