முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஹராமான செயற்பாடு தொடர்பில், அனுர குமார திஸாநாயக்க கருத்து
“தேர்தல் நெருங்கும்போது, சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை விநியோகிக்கிறார்கள்” என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திஸாநாயக்க, “அது ஹராம்” என்றும் கூறியுள்ளார்.
திருகோணமலை கிண்ணியாவில் நேற்ற முன்தினம் நடைபெற்ற தேர்தல் பேரணில் உரையாற்றிய போதே – அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர் எனவும் அவர் இதன்போது கூறினார்.
“தேர்தல் நெருங்கும்போது, தலைவர்கள் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை விநியோகிக்கிறார்கள், அது ஹராம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்திய அவர்; தேசிய மக்கள் சக்தி அனைத்து இனத்தினருக்குமான கட்சி என்றும் தெரிவித்தார்.