ஸஹ்ரானின் மனைவியிடம் பெற்றப்பட்ட வாக்கு மூலம் தொடர்பாக நீதிமன்றில் வாதப் பிரதிவாதம்: நொவம்பர் 18 வரை வழக்கு ஒத்தி வைப்பு

🕔 October 1, 2022

– பாறுக் சிஹான் –

ஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிடம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில், நேற்று (30) நடைபெற்ற வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து  எதிர்வரும் நொவம்பர்  மாதம் 18 திகதி வரை, குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை, பிரதிவாதி ஸஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் முஹமட் அக்ரம் உட்பட சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.

இந்த விசாரணையின் போது – மன்றில் அரச சட்டவாதியின் நெறிப்படுத்தலுடன் ஸஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல்வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டு – பிரதிவாதியின் சட்டத்தரணிகளினால் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன.

ஸஹ்ரானின் மனைவிக்கு எதிராக  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றியும், அவை தொடர்பில் வாக்குமூலங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் – வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

இதனையடுத்து இந்த வழக்கு எதிர்வரும் நொவம்பர் மாதம் 18 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது  – பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்