கனடாவில் பல பகுதிகளில் கத்திக் குத்து: 10 பேர் பலி

🕔 September 5, 2022

னடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 வெவ்வேறு இடங்களில் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் டேமியன் சாண்டர்சன் (31 வயது) மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் (30 வயது) ஆகிய இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்த நிலையில் “பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியேறா வேண்டாம் என்றும், மற்றவர்களை உங்கள் குடியிருப்புக்குள் அனுமதிப்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை; “கொடூரமான, இதயத்தை நொறுக்கும் தாக்குதல்” என விவரித்துள்ளார்.

சந்தேக நபர்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்