துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் பலி

🕔 August 2, 2022

கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரை இலக்கு வைத்து இந்த துப்பாக்சிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லேரியா வங்கிச் சந்திக்கு அருகில் பிரதேச சபை உறுப்பினர் நின்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் இந்தக் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்