அட்டாளைச்சேனை அல் முனீறா வித்தியாலய ஆரம்ப பிரிவுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலிருந்த மின் விசிறிகள் களவு

🕔 July 24, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்கென பாவங்காய் வீதியை அண்மித்து நிர்மாணிக்கப்பட் வகுப்பறைக் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறிகள் களவாடப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த 06 மின் விசிறிகள் களவாடிச் செல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் தரப் பாடசாலையின் ஆரம்பப் பிரிவை (தரம் 01 முதல் 05 வரை), தற்போதுள்ள இடத்திலிருந்து – வேறு இடத்துக்கு மாற்றும் பொருட்டு, அட்டாளைச்சேனை பாவங்காய் வீதியை அண்மித்து பல கோடி ரூபாய் நிதியில் வகுப்பறைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு நீண்ட காலமாகியுள்ள போதிலும், அங்கு ஆரம்பப் பிரிவை கொண்டு செல்லாமல், பாடசாலை அதிபர் இழுத்தடிப்புகளைச் செய்து வருவதாகவும், புதிய இடத்துக்கு ஆரம்பப் பிரிவைக் கொண்டு செல்லுமாறு தாம் அதிபரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தும், இதுவரை அதிபர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனவும், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் நிருவாகத்தினர் கூறுகின்றனர்.

குறித்த கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டதில் இருந்து – அவை பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அங்கு போதைப் பொருள் பாவனையாளர்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாட்டாளர்களின் நடமாடங்கள் காணப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

எனவே அரச நிதியியில் பல கோடி ரூபாய்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் இவ்வாறு பயனில்லாமல் பாழடைந்து கிடப்பது தொடர்பில் உயர் அதிகாரிகள்உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒரு சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள், இவ்வாறு பிரயோசனமின்றி கை விடப்பட்டிருப்பதை அனுமதிக்க முடியாது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்