அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்: 14200 குடும்பங்கள் பாதிப்பு
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், திண்மக் கழிவகற்றல் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது என – அட்டாளைச்சேனை பிரதேச சபை கூறியுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள்
49475 சனத் தொகையையுடைய 32 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டதாகும். இங்கு 14200 குடும்பங்கள் உள்ளன.
இவ்வாறு அதிகளவான குடும்பங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், திடீரென திண்மக் கழிவகற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமை காரணமாக, மக்கள் சுகாதார பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
எனவே, இவ்விடயத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் – தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.