எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரும் தினங்கள் குறித்து அமைச்சர் அறிவிப்பு

🕔 July 3, 2022

டீசல் கப்பல்கள் மூன்று உட்பட நான்கு எரிபொருள் கப்பல்கள் இம்மாதம் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், டீசல் கப்பல்கள் ஜூலை 8 – 9, ஜூலை 11 – 14 மற்றும் ஜூலை 15 – 17 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு வரும் என்றார்.

ஜூலை 22 – 23 நாளில் பெற்றோல் கப்பல் இலங்கையை வந்தடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்