பிரபாகரன் 30 வருடங்களில் செய்ய முடியாததை, கோட்டா இரண்டரை வருடங்களில் செய்து முடித்து விட்டார்: துமிந்த திஸாநாயக்க

🕔 July 3, 2022

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 30 வருடங்களாக முயன்று தோல்வியுற்ற ஒன்றை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டரை வருடங்களில் சாதித்துவிட்டார் என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“பிரபாகரன் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்த விரும்பினார். அதனால்தான் அவர் கொழும்பில் தாக்குதல்களை நடத்தியதோடு மேலும் பல காரியங்களையும் செய்தார்.

ஆனால், பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டரை வருடங்களில் செய்துள்ளார் என்பதை நாம் இப்போது புரிந்து கொண்டுள்ளோம்” என கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது அவர் கூறினார்.

ஜனாதிபதி மீது கடுமையான தாக்குதலை தொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த, தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்த்தார்.

இது இவ்வாறிருக்க துமிந்த திஸாநாயக்கவின் கட்சியைச் சேர்ந்த சிலர் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்