ஜோன்ஸ்டன் பெனாண்டோவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

🕔 June 8, 2022

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மே 09 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், இந்தக் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தன்னைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை ஜோன்ஸ்டன் தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்ற பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மே 09 அமைதியின்மை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொண்டர்கள் பலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தொடர்பான செய்தி: தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் ரிட் மனு தாக்கல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்