துமிந்த சில்வா கைது: வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிஐடி யிடம் சிக்கினார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான துமிந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
துமிந்த சில்வா மரண தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியமையினை அடுத்து – அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் துமிந்த சில்வா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பை இடைநிறுத்துவதாக நேற்று (31) உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து சிறைச்சாலை காவலில் வைப்பதற்காக ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.
தொடர்பான செய்தி: துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி