சாய்ந்தமருதில் திருட்டு அதிகரிப்பு; சந்தேக நபர்கள் போதைக்கு அடிமையானோர்: கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

🕔 May 26, 2022

– பாறுக் ஷிஹான் –

மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு, கடைகள் உடைப்பு அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தலானது சாய்ந்தமருது பள்ளிவாசல்களில் உள்ள ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்றிலிருந்து சாய்ந்தமருது பகுதியில் தற்காலிகமாக வாடகை அடிப்படையில் தங்கியுள்ள அனைவரையும் தத்தமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக அதிகளவான மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டுக்களும் கடை உடைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த திருட்டு சம்பத்தில் ஈடுபடுபவர்களில் அனேகமானோர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்