ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட ஹரீன் எம்.பி தீர்மானம்

🕔 May 11, 2022

க்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நாடாளுமுன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டுக்கு விரைவில் அரசாங்கம் ஒன்று தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி இதை தாமதப்படுத்துவதால், நான் சுயாதீனமாக இருக்க முடிவு செய்துள்ளதோடு, அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆதரிக்கிறேன்”என்று அவர் ஆங்கில ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.

“தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவது சிறந்தது, ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. இதை நாம் எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாடு பாதிக்கப்படும்” என்றும் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்