நேற்று சம்பியன்; இன்று மரணம்: மனதைக் கலங்க வைக்கும் கவுசல்யாவின் இழப்பு

🕔 April 24, 2022

லங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற கௌசல்யா மதுஷானி காலமானார்.

26 வயதான குறித்த பெண், தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தியகம – மஹிந்த ராஜபக்ஷ மைத்தானத்தில் நேற்று (24) நடைபெற்ற 100ஆவது தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில், சிறந்த தடைதாண்டலுக்கான ‘குளுக்கோலின் சவால் கிண்ணத்தை’ கவுசல்யா வென்றார்.

400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தை 58.37 வினாடிகளில் கடந்து இவர் சம்பின் ஆனார்.

26 வயதான கவுசல்யா, 2019 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் ஒருவராவார்.

அதேவேளை 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியிலும் இவர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்