ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி; 10க்கும் மேற்பட்டோர் காயம்: ரம்புக்கனையில் சம்பவம்

🕔 April 19, 2022

ர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் ரம்புக்கனையில் இன்று (19) பிற்பகல் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்ததை களத்தில் இருந்து வெளிவரும் வீடியோகள் காட்டின. இந்த நிலைமைக்கு பொலிஸார்தான் காரணம் என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து ரம்புக்கனை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டிடத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து 15 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்