திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

🕔 February 28, 2022

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் –

திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று (28) கையளிக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம் குறித்த அம்புலன்ஸ் வண்டிகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் கையளித்தார். 

இந்த வைத்தியசாலைகளில், நீண்ட காலமாக நிலவிவந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சு இந்த அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி வைத்துள்ளது. 

இந்நிகழ்வில் திருக்கோவில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.பி. மஸ்கூத், பொத்துவில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டீ. எஸ்.ஆர்.டீ. ஆர். றஜாப் ஆகியோர் கலந்து கொண்டு அம்புலன்ஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உயர் அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்