அரிசி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகஅறிவிப்பு
நாட்டில் மீண்டும் அரிசியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா கூறியுள்ளார்.
வழமையாக ஜனவரி மாதத்தில், குறித்த ஆண்டுக்கான பெரும்போக அரிசி சந்தைக்கு கிடைக்கும். ஆனால், உரப் பிரச்சினை காரணமாக இந்த முறை போதியளவான அரிசி சந்தைக்கு கிடைக்கவில்லை என, சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடு இன அரிசி 115 ரூபாவுக்கு சில நாட்களுக்கு முன்னர் விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.